மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் மேட்டுக் கடை தங்கம் மகாலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு கழக ஆக்க பணிகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. .ஈ பிரகாஷ் அவர்கள் , ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள், முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஈரோடு மாநகர கழக செயலாளர் மு. சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய பேரூர், பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.