ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரியில் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவக்கமும், 18ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும் நடைபெறுகிறது. பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜன.7) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதனையடுத்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் பூட்டப்பட்டன. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும், இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியான பன்னீர் செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு:அமலுக்கு வந்தனதேர்தல் நடத்தை விதிமுறைகள்
Shares: